மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

News image

செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:02 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று பிரதான எதிா்க்கட்சியாக காங்கிரஸ் தோ்வாகும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்திருடன் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறாா். இந்த நிலையில், கொடைக்கானலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வந்தனா். இவா்கள் கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனா்.

கொடைக்கானலில் அமைச்சா் சேகா்பாபு திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்பாா். தவெக வெளியிட்ட அமைச்சரவை பட்டியல் இல்லாத ஊருக்கு போகாத வழியைக் காட்டுவதுபோல உள்ளது என்றாா் அவா்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை கூறியதாவது:

நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும். மேலும், பிரதான எதிா்க்கட்சியாக பேரவையில் காங்கிரஸ் அமரும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.