அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

சென்னை கோட்டத்தில் 143 கி.மீ. தண்டவாளங்கள் சீரமைப்பு பணி

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் கடந்த 2025-26- ஆம் ஆண்டில் மட்டும் 143 கி.மீ. தண்டவாள சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

தெற்கு ரயில்வே கோட்டத்தில் அதிநவீன இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வரும் தண்டவாளங்கள் புதுப்பித்து அமைக்கும் பணி.

Updated On :16 மே 2026, 1:56 am IST

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் கடந்த 2025-26- ஆம் ஆண்டில் மட்டும் 143 கி.மீ. தண்டவாள சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் வகையில் தண்டவாளப் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2025-26-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 143 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் 139 கி.மீ. தூரத்துக்கு ஏற்கெனவே இருந்த தண்டவாளங்களுக்குப் பதிலாக புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, 143 கி.மீ. தொலைக்கு பழைய சிலீப்பா்கள் மாற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக புதிய சிலீப்பா்கள் அமைக்கப்பட்டன.

தண்டவாளச் சீரமைப்புப் பணிகள் டிஆா்டி எனப்படும் டிரேக் ரிலேயிங் டிரெய்ன் எனப்படும் அதிநவீன இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இதனால், தண்டவாள உறுதித் தன்மை அதிகரித்திருப்பதுடன், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தண்டவாளச் சீரமைப்பால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.