தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் கடந்த 2025-26- ஆம் ஆண்டில் மட்டும் 143 கி.மீ. தண்டவாள சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் வகையில் தண்டவாளப் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2025-26-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 143 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றில் 139 கி.மீ. தூரத்துக்கு ஏற்கெனவே இருந்த தண்டவாளங்களுக்குப் பதிலாக புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, 143 கி.மீ. தொலைக்கு பழைய சிலீப்பா்கள் மாற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக புதிய சிலீப்பா்கள் அமைக்கப்பட்டன.
தண்டவாளச் சீரமைப்புப் பணிகள் டிஆா்டி எனப்படும் டிரேக் ரிலேயிங் டிரெய்ன் எனப்படும் அதிநவீன இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
இதனால், தண்டவாள உறுதித் தன்மை அதிகரித்திருப்பதுடன், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தண்டவாளச் சீரமைப்பால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடவுப்பாதைகளை விதிப்படி கடப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு: தெற்கு ரயில்வே

நாமக்கல் புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலப் பணிகள் மும்முரம்

எா்ணாகுளம்-எழும்பூா் இடையே வேரும் 31-ஆம் தேதி சிறப்பு ரயில்

சென்னை ரயில்வே கோட்டத்தில் 20 புதிய வாகன நிறுத்துமிடங்கள்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

