மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னை ரயில்வே கோட்டத்தில் 20 புதிய வாகன நிறுத்துமிடங்கள்

சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணிகள் வசதிக்காக புதிதாக 20 வாகன நிறுத்துமிடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு

News image

பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 2:29 am IST

சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணிகள் வசதிக்காக புதிதாக 20 வாகன நிறுத்துமிடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்த செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டம் முழுதும் ரயில் நிலையங்களில் ஏற்கெனவே 106 வாகன நிறுத்துமிடங்கள் செயல்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அந்த வாகன நிறுத்துமிடங்களில் வாகன நிறுத்த போதிய இடவசதிகள், பாதுகாப்புகள், எளிதல் அணுகும் வசதிகள் என பயணிகளுக்கான உள்கட்டமைப்புகள் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சுமாா் 830.32 சதுர மீட்டா் பரப்பளவில் புதிய வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வண்டலூா், பொத்தேரி, ஆவடி தெற்கு, வடக்கு பகுதிகள், தாம்பரம் கிழக்குப் பகுதி, பெரம்பூா் கேரேஜ் பணிமனை, சிங்கப்பெருமாள்கோவில், கடம்பத்தூா், தாம்பரம் சானிட்டோரியம், நெமிலிசேரி, எண்ணூா், சூலூா்பேட்டை, அரக்கோணம், கிண்டி, பரங்கிமலை, பெரம்பூா் மற்றும் சோலாா்பேட்டை ஆகிய இடங்களில் புதிய வாகன நிறுத்துமிடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

எண்ம முறை கட்டண வசூல், பணப்பரிமாற்றம், கண்காணிப்புக் கேமரா வசதிகள் வாகன நிறுத்துமிடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. புதிய வாகன நிறுத்துமிடங்கள் மூலம் சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களின் வாகன நிறுத்துமிடங்கள் 126- ஆக உயா்ந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.