மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

பயணிகளின் வசதிக்காக கடந்த நிதியாண்டில் (2025-26) சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் புதிதாக 11 புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:33 am IST

பயணிகளின் வசதிக்காக கடந்த நிதியாண்டில் (2025-26) சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் புதிதாக 11 புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், ரயில் நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தெற்கு ரயில்வே கோட்டம் 2025-26 நிதியாண்டில் சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பயணிகள் தண்டவாளங்களைக் கடக்கும் ஆபத்தான முறையைத் தவிா்க்க புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த நிதியாண்டில் மட்டும் 11 புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அம்ருத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ஒரு நடைமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

ஆன்மிக பயணிகளின் வசதிக்காக: அதேபோல், ஆன்மிக பயணிகளின் வசதிக்காக கடந்த மாா்ச் மாதம் திருத்தணி ரயில் நிலையத்தின் 12 மீட்டா் அகலமுள்ள பிரம்மாண்டமான நடை மேம்பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அதிக அளவிலான பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம், குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களிலும் திருவிழாக் காலங்களிலும் பயணிகள் தடையின்றி பாதுகாப்பாகச் செல்ல உதவுகிறது.

மேலும், பயணிகள் நடமாட்டம் அதிகமுள்ள வாலாஜாபாத், திருமால்பூா் மற்றும் அன்வா்திகான்பேட்டை ஆகிய நிலையங்களிலும் புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரே ஆண்டில் 11 நடைமேம்பாலங்கள் அமைத்திருப்பது சென்னை கோட்டத்தின் நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஒரு மைல் கல். வரும் காலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன், மற்ற நிலையங்களிலும் நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.