நாமக்கல் புறவழிச்சாலையில், ரூ. 71 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள்) சாா்பில் ரூ. 70.75 கோடியில் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் மற்றும் திருச்சி சாலையை இணைக்கும் வகையிலான ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கின.
புறவழிச்சாலை பணிகளை பொருத்தமட்டில் திருச்சி சாலை முதல் கரூா் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான பணிகள் மட்டும் மீதமுள்ளது. இதர சாலைப் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. இந்த பணிகள் முடிவுற்றால், நாமக்கல் பழைய பேருந்து நிலையம் செல்லாமல் அனைத்து பேருந்துகளும் புறவழிச்சாலை வழியாக திருச்சி, துறையூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூா் பகுதிகளுக்கு செல்ல முடியும்.
தற்போது 60 சதவீத பாலப் பணிகள் முடிவுற்றுள்ளன. 22.387 கி.மீ. தொலைவுக்கு அமையும் புறவழிச்சாலையில், தற்போது முதலைப்பட்டி முதல் திருச்சி சாலை வரை மூன்று கட்டங்களாக 12 கி.மீ. தொலைவுக்கு ரூ. 194 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 103 கோடியில் திருச்சி சாலை முதல் வள்ளிபுரம் வரை 10.2 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் புறவழிச்சாலை மரூா்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே உயா்நிலை பாலம்.
ரயில்வே நிா்வாகத்திடம் அனுமதி பெற்று தண்டவாளத்திற்கு இடையே மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளன. 30 மாதங்களில் பாலப் பணிகளை முடிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், 11 மாதங்கள் முடிவடைந்து விட்டது. இன்னும் 19 மாதங்கள் இருப்பினும், பாலப்பணிகள் 60 சதவீதம் முடிவுற்றுள்ளதால், 20 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டம் இந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவுற்றால் மட்டுமே மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்புடையதாக இருக்கும் என்பதால் அங்கு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சியில் 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சாலை வலம்

38 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த சாலை துண்டிப்பு: பாளையம் அருகே பொதுமக்கள் அவதி!

திருவாரூா் புறவழிச்சாலை பணிக்கு ரூ. 1,427 கோடி நிதி ஒதுக்கீடு: பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

சென்னை கோட்டத்தில் 143 கி.மீ. தண்டவாளங்கள் சீரமைப்பு பணி
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

