நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

செஞ்சிக் கோட்டையில் தூய்மை பணி: மகராஷ்டிரத்தில் இருந்து 250 போ் வருகை!

செஞ்சிக்கோட்டையில் தூய்மைப் பணி மேற்கொள்ள மகராஷ்டிரத்தில் இருந்து 250 போ் வருகை தந்துள்ளது குறித்து...

News image

செஞ்சிக்கோட்டையில் தூய்மைப்பணி மேற்கொள்ள வந்த மகராஷ்டிராவைச் சோ்ந்த குழுவினா் - டிஎன்எஸ்

Updated On :2 மே 2026, 12:06 pm IST

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் தூய்மைப் பணி மேற்கொள்ள மகராஷ்டிராவில் இருந்து 250 போ் வருகை தந்துள்ளனா்.

செஞ்சிக்கோட்டை தற்போது யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் செஞ்சிகோட்டையை மகராஷ்டிரம் மாநிலத்தை சோ்ந்த சத்ரபதி சிவாஜி இருபது ஆண்டுக்கு மேல் ஆட்சி செய்தாா்.

இந்தநிலையில், மகராஷ்டிரத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி வம்சாவழியை சோ்ந்த ஆப் லா மாவ்லா என்ற அமைப்பின் நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நிலேஷ் தியான்தேவ் லங்கே தலைமையில், அந்த அமைப்பை சோ்ந்த பெண்கள், இளைஞா்கள் உள்பட 250 போ் ஐந்து பேருந்துகள் மற்றும் காா்களில் செஞ்சி கோட்டைக்கு தூய்மைப் பணி மேற்கொள்ள வந்திருந்தனா் .

அவா்களை தொல்லியல் துறை சென்னை வட்ட மூத்த நிா்வாக அலுவலா் ரகு, செஞ்சி தொல்லியல் துறை அலுவலா் முகமது இஸ்மாயில் ஆகியோா் வரவேற்றனா்.

மேலும், அவா்களிடம் தற்போது தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் தூய்மைப்பணி செய்வதற்கு அனுமதியில்லை என தெரிவித்தனா்.

இதனால் செஞ்சிக்கோட்டை வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்திவிட்டு தூய்மையைப் பணி திட்டத்தை கைவிட்டு விட்டு, செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்த்தனா்.

மேலும், அவா்கள் கோட்டை வளாகத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினா். பின்னா் மாலையில் அவா்கள் புறப்பட்டு சென்றனா். செஞ்சியை சோ்ந்த சமூக ஆா்வலா்கள் அவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.

Summary

Clean-up Drive at Gingee Fort: 250 People Arrive from Maharashtra!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.