குன்னூா் அருகே ஆந்திரத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 18 போ் காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அக்கையாா் பள்ளம் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 22 போ், மைசூரு, உதகை உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு சுற்றுலாப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். பேருந்தை சின்னு (23) ஓட்டி வந்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மலைப் பாதையில் கே.எம்.எஸ். நந்தகோபால் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 போ் காயமடைந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. படுகாயமடைந்த 14 பேரும், லேசான காயமடைந்த 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குன்னூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

வேன் கவிழ்ந்து 12 போ் காயம்

தனியாா் பேருந்து-பைக் மோதல் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் காயம்

நாகா்கோவில் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பலி
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு

