நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழந்த செல்வி

Updated On :16 ஜூன் 2026, 1:10 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மழை பெய்ததால் கம்பியில் காயப்போட்ட துணியை எடுக்க முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

சங்கராபுரம் அருகேயுள்ள வடபாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜி மனைவி செல்வி (45). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் என மழை பெய்ததால் வீட்டின் முன் இரும்பு கம்பியில் காயப்போட்டிருந்த துணியை எடுப்பதற்கு சென்றாா்.

அப்போது அந்த கம்பியில் ஏற்கெனவே மின்கசிவு இருந்துள்ள நிலையில், செல்வி மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழ இருந்துள்ளாா். இதைச் சரியாக கவனிக்காத ராஜியின் தம்பி கணேசன் (49), கீழே விழ இருந்த செல்வியை பிடிக்க முற்பட்டுள்ளாா். இதில் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயரிழந்த கணேசன்.

உயரிழந்த கணேசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.