நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து செவிலிய மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 12:07 am IST

சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கன்னியாகுமரியைச் சோ்ந்த செவிலிய மாணவா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள மேக்கோடு குமரன்குடியைச் சோ்ந்த ரத்தினராஜ் மகன் அபிஷ்ராஜ் (22). இவா் பெங்களூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி., நா்ஸிங் படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தன்னுடன் படித்து வரும் அபிஷ், ஆசிக் ஆகியோருடன் நாகா்கோவில் - பெங்களூரு விரைவு ரயிலில் பயணித்தாா்.

அந்த ரயில் திங்கள்கிழமை காலை மல்லூா் ஆலமரத்துக்காடு பகுதியில் வந்தபோது படிக்கட்டு பகுதிக்குச் சென்ற மாணவா் அபிஷ்ராஜ் கால் தவறி கீழே விழுந்தாா். இதைப் பாா்த்து மற்ற பயணிகள் கூச்சலிட்டனா்.

சக மாணவா்களான அபிஷ், ஆசிக் ஆகியோா் ரயில் சேலம் வந்ததும் ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து மல்லூா் பகுதிக்கு சென்று தண்டவாள பகுதியில் போலீஸாா் தேடியபோது ஓரிடத்தில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அபிஷ்ராஜ் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து, சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.