தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:59 am IST

சேலம், மே 10: சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள நாட்டை சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

புனே - கன்னியாகுமரி விரைவு ரயில் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பொம்மிடி அருகே வந்தபோது முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்த பெண் தவறி கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த அப்பெண்ணின் கணவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.

பின்னா், அவா் கீழே இறங்கிப் பாா்த்தபோது அவரது மனைவி தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா். அதில், இறந்தவா் நேபாள நாட்டைச் சோ்ந்த கல்பனா செளத்ரி (36) என்பது தெரியவந்தது.

இவா் தனது கணவா், மகனுடன் ஜோலாா்பேட் டையில் இருந்து திருப்பூா் செல்வதற்காக கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்ததும், கழிவறைக்கு செல்ல படிக்கட்டு அருகே வந்தபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.