பெண்கள் உடை தைக்கும் டைலர்கிட்ட சட்டை தைக்கக் கொடுத்தது தப்பாப் போச்சா, ஏன் ?'
'சட்டைக்குப் பின்னாடி ஜன்னல் வச்சி தைச்சிட்டாருடா !'
-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.
'உங்க பையன் பிளஸ் டூ பாஸ் ஆயிட்டானே... மேல படிக்கலையா?'
'இல்லை... எங்க வீட்டுல மாடி இல்லை!'
-தீபிகா சாரதி, சென்னை-5.
'சாப்பிட என்ன செய்யறே... இட்லியா, தோசையா?'
'எதுவோ ஒண்ணு...'
'ஒண்ணு பத்தாது... மினிமம் நாலு வேணும்!'
'கிளம்பின பாத்திரக்காரரை ஏன் திரும்பக் கூப்பிடுறே?'
'அத்தை போட்ட பழைய பாத்திரத்தைப் பாதி விலைக்கு வாங்க!'
'கச்சேரி எடுபடல...'
'எப்படிச் சொல்றே?'
'ஒருத்தர்கூட தூங்கலயே..?'
'ஆரத்தி எடுத்தா தட்டில் பணம் போடுவீங்களா?'
'தட்டில் போட மாட்டோம்... உங்க பேங்க் அக்கவுன்ட்லதான் போடுவோம்!'
'என்ன... வீட்டில் அடகுக் கடை வச்சிருக்கீயா?'
'வீட்டை அடகு வச்சு கடை வச்சிருக்கேன்!'
'உங்க ரெண்டு பேர் சண்டையில எதுக்கு என்னைத் திட்டுறே?'
'சமாதானம் செய்து வைக்க ஏன் வரலைன்னு திட்டுறேன்!'
'அத்தையோடு நீ போடுற சண்டை நல்லாவே இல்லே...'
'சண்டை போடக்கூடாதா?'
'கொஞ்சம் விறுவிறுப்பா போடுன்னு சொல்றேன்.'
-பர்வதவர்த்தினி, பம்மல்.
'கடுமையா கோபம் வந்ததுல சுவர்ல போய் முட்டிக்கிட்டேன், டாக்டர்!'
'ஏன் அப்படிச் செஞ்சீங்க?'
'கோபம் கண்ணை மறைச்சிடுச்சி!'
'அந்த பேஷன்ட் என்னை சைடுல தட்டுறாரு, டாக்டர்?'
'நான்தான் அப்பவே சொன்னேனே... அவரோட மாத்திரைக்கு சைடு எஃபக்ட் உண்டுன்னு!'
'என் பொண்டாட்டியை நான் கண்டிச்சது உன் காதுல விழுந்துச்சாம்மா?'
'என் காதுல விழாட்டியும் பரவாயில்ல... அவ காதுல விழற மாதிரி சொன்னேயில்ல...?'
'ரெண்டாவது தடவை பொரியல் கேட்டா, கரண்டியை ஓங்கறாங்களே...?'
'நான் தான் அப்பவே சொன்னேனே சார்... இந்த ஹோட்டல்ல எல்லாமே 'ஹோம்லியா' இருக்கும்னு!'
'பொண்ணு பார்க்கப் போயிருந்த இடத்துல உனக்கு பிராக்டிகல் எக்ஸôம் வச்சாங்களா... என்னப்பா சொல்றே?'
'அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் கொடுத்து ஏதாவது டிஷ் செய்துகாட்டச் சொன்னாங்க...!'
-வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

தொகுதி மறுவரையறை மசோதா: கே.எஸ்.மூா்த்தி கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு
ஹா...ஹா...
நான்குனேரியை அதிமுக விட்டுக் கொடுத்தது வருத்தமளிக்கிறது: முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
