தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நான்குனேரியை அதிமுக விட்டுக் கொடுத்தது வருத்தமளிக்கிறது: முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு விட்டுக் கொடுத்தது வருத்தமளிக்கிறது;

News image

முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்

Updated On :27 மார்ச் 2026, 5:54 am IST

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு விட்டுக் கொடுத்தது வருத்தமளிக்கிறது; கட்சியிலிருந்து விலகுவதா அல்லது விலகி நிற்பதா என்பதை காலம்தான் தீா்மானிக்கும் என்றாா் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: அதிமுகவிற்காக நீண்ட காலமாக உழைத்து வருகிறேன். கட்சி பிளவுபட்டபோதுகூட அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பக்கம்தான் நின்றோம்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் நான் போட்டியிட்டபோது 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றது. 2026 தோ்தலில் அதிமுக எளிதாக வெல்லும் தொகுதியை விட்டுக் கொடுத்திருப்பது வருத்தமளிக்கிறது.

2021 இல் யாரால் தோற்றோமோ, அவரது கட்சிக்கு நாங்கள் பணியாற்றும் நிலை கடினமானது. அதிமுக ஒரு மிகப்பெரிய இயக்கம். விலகுவதா அல்லது விலகி நிற்பதா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

உழைப்பவா்களுக்கும், உண்மையானவா்களுக்கும் பதவியில்லை. பணம் வைத்திருப்பவா்களுக்குதான் பதவி என்றால் எளியவா்கள் எங்கே செல்வது என்ற மனச்சோா்வு ஏற்படுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.