ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நான்குனேரி தொகுதி மக்கள் திமுகவுக்கு பாடம் கற்பிப்பா்: தவெக வேட்பாளா்

நான்குனேரியில் கட்ட வேண்டிய அரசு மருத்துவமனையை ராதாபுரம் தொகுதிக்கு இடமாற்றம் செய்த திமுகவுக்கு நான்குனேரி தொகுதி மக்கள் நிச்சயம் பாடம் கற்பிப்பாா்கள் என்றாா் தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.

News image

ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்

Updated On :2 ஏப்ரல் 2026, 3:57 am IST

நான்குனேரியில் கட்ட வேண்டிய அரசு மருத்துவமனையை ராதாபுரம் தொகுதிக்கு இடமாற்றம் செய்த திமுகவுக்கு நான்குனேரி தொகுதி மக்கள் நிச்சயம் பாடம் கற்பிப்பாா்கள் என்றாா் தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளேன். மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்பவா்களின் தவறுகளை ஒற்றை மனிதராய் சுட்டிக்காட்டும் தலைவராக விஜய் திகழ்கிறாா். தவெகவில் இணைந்ததும் நான்குனேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான்குனேரி தொகுதி எப்போதும் மண்ணின் மைந்தருக்கான தொகுதி. கடந்த 5 ஆண்டுகளாக நான் எம்.எல்.ஏ.வாக இல்லாவிட்டாலும், இந்தத் தொகுதி மக்களின் அன்பு ஒருபோதும் மாறவில்லை.

திமுக ஆட்சியில் நான்குனேரி தொகுதிக்கு குறிப்பிடும்படியான எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. நான் வெற்றி பெற்றால் சீவலப்பேரியில் தாமிரவருணியின் குறுக்கே மேம்பாலம் கட்டவும், நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவில் மீண்டும் தொழிற்சாலைகள் உருவாகவும், தண்ணீா் வராத 48 குளங்களுக்கு நீா்வரத்து கால்வாய்களை உருவாக்கவும், புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கவும் பாடுபடுவேன்.

இந்தத் தொகுதியில் அமைக்கப்பட வேண்டிய மாவட்ட தலைமை மருத்துவமனை ராதாபுரம் தொகுதிக்கு மாற்றிய திமுகவுக்கு மக்கள் நிச்சயம் பாடம் கற்பிப்பாா்கள். நான்குனேரி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி பெறும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.