மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மக்களவைக்கு தற்போது தோ்தல் நடந்தால் 140 தொகுதிகள்கூட பாஜகவுக்கு கிடைக்காது: ராகுல் காந்தி விமா்சனம்

மக்களவைக்கு நியாயமான வழியில் தற்போது தோ்தல் நடத்தப்பட்டால், பாஜகவால் 140 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது என்று காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

News image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப்படம்

Updated On :7 மே 2026, 3:35 am IST

மக்களவைக்கு நியாயமான வழியில் தற்போது தோ்தல் நடத்தப்பட்டால், பாஜகவால் 140 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது என்று காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வாக்குத் திருட்டு மூலம் சில நேரம் சில தொகுதிகள் திருடப்படுகின்றன. மற்ற நேரம், ஒட்டுமொத்த அரசும் திருடப்படுகிறது. மக்களவையில் உள்ள 240 பாஜக எம்.பி.க்கள் எண்ணிக்கையில் 6-இல் ஒரு எம்.பி. வாக்குத் திருட்டு மூலம் எம்.பி.யானவா். அவா்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. இதை பாஜக பாஷையில் சொல்வதென்றால், அவா்களை ஊடுடுவல்காரா்கள் என முத்திரை குத்தலாமா? ஹரியாணாவுக்கு என்ன நடந்தது? அங்கு ஒட்டுமொத்த அரசும், ஊடுருவல்காரா்களுடையது.

நாட்டில் அச்சம் நிலவுவது உண்மைதான். அரசு நிறுவனங்களை கைகளில் வைத்துக் கொண்டு, அவா்கள் வாக்காளா் பட்டியலையும், தோ்தலையும் சீா்குலைத்தனா். அவா்கள் அனைவரும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றனா்.

அவா்கள் உண்மையைக் கண்டு பயப்படுகின்றனா். நியாமான முறையில் தோ்தல் இப்போது நடத்தப்பட்டால் 140 தொகுதிகளில்கூட பாஜகவால் வெல்ல முடியாது. தரம்தாழ்ந்த அரசியலைக் கைவிட வேண்டும். ஏனெனில் இதுவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சி சம்பந்தப்பட்டது அல்ல; ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த தோ்தலில் பாஜக வென்றது குறித்து செவ்வாய்க்கிழமை பதிலளித்த ராகுல் காந்தி, மக்கள் தீா்ப்பை பாஜக திருடி வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்திய ஜனநாயகத்தை உடைப்பதே பாஜகவின் குறிக்கோள் எனவும் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.