மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஜம்மு-காஷ்மீா்: போதைப்பொருள் கடத்தியவா் சொத்து முடக்கம்

News image
Updated On :4 மே 2026, 4:29 am IST

ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல்காரரின் ரூ.40 லட்சம் மதிப்பிலான சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா்.

ஜம்மு மாவட்டம் சைனிக் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரஃபீக் அகமது. போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்ட வந்த அவா் மீது இது தொடா்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன.

குற்றங்கள் தொடா்பாக அண்மையில் உதம்பூா் காவல் துறையினா் அவரைக் கைது செய்து விசாரித்தனா். இப்போது, அவா் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் நிலம் உள்ளிட்ட அசையாத சொத்துகளை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை முடக்க காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொண்டனா். முக்கியமாக போதைப்பொருள் தடுப்புச் சட்டப் பிரிவு 68 எஃப்-இன் கீழ் அந்த சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் வழியாக போதைப்பொருள், ஆயுதங்களை அதிகம் கடத்துகின்றனா். போதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதுடன், இந்தியாவில் இளைஞா்கள் சீரழிவு, பொதுஅமைதி சீா்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.