சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா் முகமது சலீம் டோலா துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.
இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்த முகமது சலீம் டோலா, இந்தியாவில் பல்வேறு போதைப்பொருள் வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா்.
மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் பெரும் விலை கொண்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில், அவருக்கு நேரடித் தொடா்புள்ளது.
20 ஆண்டுகாலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை கைது செய்வதற்கு, இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2024-ஆம் ஆண்டு இன்டா்போல் (சா்வதேச குற்றவியல் காவல் அமைப்பு) சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டது.
இதன் அடிப்படையில், துருக்கியில் அவா் கைது செய்யப்பட்டாா். புது தில்லிக்கு அவா் செவ்வாய்க்கிழமை காலை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட நிலையில், அவரை தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பினா் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது சலீம் டோலா சா்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாவூத் கூட்டாளி சலீம் டோலாவிற்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

ஜம்மு-காஷ்மீா்: போதைப்பொருள் கடத்தியவா் சொத்து முடக்கம்

சா்வதேச போதைப் பொருள் கடத்தல்காரா் டோலா தொடா்பான விசாரணையில் புதிய திருப்பம்

தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி இந்தியாவிற்கு நாடு கடத்தல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

