பாஜகவுக்கு எதிரான தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை தனியொரு நபராக போராடி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று (மார்ச் 26) தெரிவித்தார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக பாஜக செய்துவரும் செயல்கள் குறித்து மாநிலத்தில் வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் (ஏப். 23, 29) நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தேர்தல் பிரசாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே புர்பா பரதமான் பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர்,
இப்போது அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் இறைச்சி சாப்பிடக் கூடாது, முட்டை சாப்பிடக் கூடாது, பெங்காலி பேசக் கூடாது என்று அவர்களிடம் சொல்லப்படுகிறது. மேலும், அவர்கள் பெங்காலி பேசினாலும், பவங்கதேசத்தினர்களாகவே கருதப்படுவார்கள்.
இதனால் கைது செய்யப்படுவார்கள், அங்கு தொல்லை செய்யப்பட்டு பின்னர் அவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். எந்தவொரு அரசியல் கட்சிகளும் இதற்கு எதிராகப் போராடவில்லை. தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை தனியொரு நபராகப் போராடி வருகிறேன். யாருடைய பெயர்கள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது. பாஜகவுக்கு தைரியம் இருந்தால் பட்டியலை வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
Summary
I alone fought from the streets to the court West Bengal CM Mamata Banerjee
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை வரவேற்கிறார் மமதா: அஸ்ஸாம் முதல்வர்
மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தை வென்றால் தில்லியையும் கைப்பற்றலாம்: மமதா உறுதி
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


