மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக சுமார் 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியதாக முதல்வர் மமதா குற்றச்சாட்டு...

News image

மேற்கு வங்க முதல்ல்வர் மமதா பானர்ஜி (கோப்புப் படம்) - பிடிஐ

Updated On :9 ஏப்ரல் 2026, 4:19 pm IST

மேற்கு வங்கத்தில், ஆட்சியைப் பிடிப்பதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் சுமார் 90 லட்சம் வாக்காளர்களை பாஜக நீக்கியுள்ளதாக, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதையடுத்து, ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவின் மூத்த தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தில் முறையிடும் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளது. ஆனால், நிச்சயமாக நாங்கள் வெல்வோம். நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் மீண்டும் இணைக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், பாஜக ஆளும் மாநிலங்களில் வங்கம் மொழி பேசும் மக்கள் தாக்கப்படுவதாகவும், ஊடுருவல் செய்தவர்களாகச் சித்தரிக்கப்படுவதாகவும், முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் மூலம் மேற்கு வங்கத்தில் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

West Bengal CM Mamata alleged that the BJP removed approximately 9 million voters through a sir, in an effort to seize power.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.