மேற்கு வங்கத்தில், ஆட்சியைப் பிடிப்பதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் சுமார் 90 லட்சம் வாக்காளர்களை பாஜக நீக்கியுள்ளதாக, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதையடுத்து, ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவின் மூத்த தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தில் முறையிடும் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளது. ஆனால், நிச்சயமாக நாங்கள் வெல்வோம். நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் மீண்டும் இணைக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், பாஜக ஆளும் மாநிலங்களில் வங்கம் மொழி பேசும் மக்கள் தாக்கப்படுவதாகவும், ஊடுருவல் செய்தவர்களாகச் சித்தரிக்கப்படுவதாகவும், முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் மூலம் மேற்கு வங்கத்தில் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
West Bengal CM Mamata alleged that the BJP removed approximately 9 million voters through a sir, in an effort to seize power.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மமதா பானர்ஜி தோல்வி! சுவேந்து அதிகாரி வெற்றி!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

