மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை (மே 1) தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே, தேர்தல் ஆணையத்தின்மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் மமதா, தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு இன்று (மே 1) திடீரெனச் சென்றார். அங்கு சுமார் 4 மணி நேரம் இருந்துள்ளார்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அப்படி யாரேனும் செய்ய முயன்றால் கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து பேசிய அந்த மாநிலத்தின் பாஜக தலைவரும் பவானிபூரில் மமதாவை எதிர்த்துப் போட்டியுடும் வேட்பாளருமான சுவேந்து அதிகாரி, “மமதா செய்வது அப்பட்டமான நாடகத்தைக் குறிக்கிறது. கழிவறை போன்ற வசதிகள் கொண்ட வாகனத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு விரைந்து சென்று, அங்கு நான்கு மணி நேரம் தங்கியிருந்தார். அவர் தேர்தல் முடிவை மாற்ற விரும்பினாலும், அது ஒருபோதும் நடக்காது.
மேலும், நீண்ட காலம் தங்குவதற்கு முறையான இடம் இல்லாததால், அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.
அவருடைய திட்டம் என்ன? அவர் செய்வது எதுவும் சரியில்லை. அவர் தோல்வி அடைவார் என்பதால் விரக்தியில் இருக்கிறார். மேற்கு வங்கத்தில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அது அனைவருக்கும் தெரியும். சரியான புள்ளிவிவரங்கள் மே 4 ஆம் தேதிக்குள் தெரியவரும். ஆனால், ஒரு பாஜக அரசு வரப்போகிறது” எனத் தெரிவித்தார்.
Summary
BJP leader Suvendu Adhikari stated on Friday (May 1) that West Bengal Chief Minister Mamata Banerjee is in a state of frustration over her impending defeat in the Assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!

மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்?

மமதா பானர்ஜி தோல்வி! சுவேந்து அதிகாரி வெற்றி!

பவானிபூரில் மமதா பின்னடைவு! இரு தொகுதிகளிலும் சுவேந்து அதிகாரி முன்னிலை!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


