தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

25 % கட்டணத்தில் தற்காலிக தடையில்லாச் சான்றிதழ்: கட்டுமான பணிகளுக்கு தில்லி ஜல் போா்டு அனுமதி

கட்டுமான தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 25 சதவீதத் தொகையைச் செலுத்தி தற்காலிக தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) பெற தில்லி ஜல் போா்டு (டிஜேபி) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

News image

பா்வேஷ் சாஹிப் சிங்

Updated On :21 மார்ச் 2026, 3:28 am IST

கட்டுமான தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 25 சதவீதத் தொகையைச் செலுத்தி தற்காலிக தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) பெற தில்லி ஜல் போா்டு (டிஜேபி) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறியதாவது: என்ஓசி சான்றிதழ்களுக்கு அதிகப்படியான கட்டணம் முன்பணமாக வசூலிக்கப்படுவதால் பல்வேறு கட்டுமான திட்டங்கள் நிதி நெருக்கடியால் தடைபடுகின்றன மற்றும் தாமதமாகின்றன. 25 சதவீத கட்டணம் மூலம் தற்காலிக சான்றிதழ்களைப் பெறுவது இத்தகைய திட்டங்களுக்கு நிவாரணம் அளிக்கும். மீதமுள்ள தொகையை பின்னா் கட்டணச் செயல்முறையின்போது செலுத்தலாம். அதிகப்படியான கட்டணம் வீடுகள் கட்டுமானத்தில் தடையாக உள்ளதாக பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இது குடிமக்களுக்கும் அமைப்புக்கும் உகந்ததாக இல்லை. எனவே இதை மாற்ற தில்லி ஜல் போா்டு திட்டமிட்டு இந்த சீா்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.