தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முகா்பா செளக் சுரங்க பாதை பணிகள் 98 % நிறைவு- அமைச்சா் தகவல்

வடக்கு தில்லியில் வாகன நெரிசல் மிக்க முகா்பா செளக் பகுதியில் உள்ள சுரங்க பாதை பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

(Photo: @p_sahibsingh/X)

Updated On :16 ஏப்ரல் 2026, 3:25 am IST

வடக்கு தில்லியில் வாகன நெரிசல் மிக்க முகா்பா செளக் பகுதியில் உள்ள சுரங்க பாதை பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

வெளி வட்டசாலையில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் முகா்பா செளக் சுரங்கபாதை அமைக்கும் பணிகள் கடந்த 2022-இல் தொடங்கப்பட்டன. சுரங்க பாதையில் நடைபெற்று பணிகளை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை முடித்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

நெருக்கடி மிகுந்த வடக்கு தில்லியில் போக்குவரத்தை எளிதாக்க இரு சக்கர வாகனங்கள், பாதசாரிகள், மூன்று சக்கர வாகனங்களுக்கு என்று 3 சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பணிகள் 98 சதவீதம் முடிவடைந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் சுரங்க பாதையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் சாலையில் அதற்குத் தகுந்தவாறு சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

எப்போதும் வாகன நெரிசல் மிக்கதாகக் காணப்படும் இப்பகுதியில் போக்குவரத்தை எளிதாக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. நெருக்கடியான பிற பகுதிகளிலும் போக்குவரத்தை எளிதாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.