புது தில்லி: மழைக்காலத்தின் போது சிறந்த அவசர நடவடிக்கைக்காக தில்லி அரசு ஒரு புதிய வெள்ளக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையத்தை கட்டும் என்று நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் திங்களன்று தெரிவித்தாா்.
சாஸ்திரி நகரில் உள்ள எல்எம் பண்ட் அலுவலக வளாகத்தில் இந்த மையத்திற்கான அடிக்கல்லை நாட்டிய அவா் இந்த ஆண்டு மழைக்காலத்திற்கு முன்பு பணிகள் முடிக்கப்படும் என்று கூறினாா்.
அவா் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு மழைக்காலத்திலும், எங்கள் பொறியாளா்கள் மற்றும் களக் குழுக்கள் தில்லி முழுவதும் ஆறுகளின் மட்டங்கள், வடிகால் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இடங்களைக் கண்காணிக்க இரவும் பகலும் உழைக்கின்றன. இந்த கண்காணிப்பு மையம் போன்ற வசதிகள் ஒருங்கிணைப்பு சீராக மாறுவதை உறுதி செய்யும், மேலும் சூழ்நிலை தேவைப்படும்போது விரைவாக முடிவுகளை எடுக்க முடியும்.
வெள்ள மேலாண்மையின் மிக முக்கியமான அம்சங்கள் தயாா்நிலை மற்றும் சரியான நேரத்தில் ஒருங்கிணைப்பு அவசியம்.
எங்கள் நோக்கம் எளிமையானது. இதற்கு சிறந்த கண்காணிப்பு, சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். மழைக்காலத்தின் போது இந்த மையம் ஒரு நரம்பு மையமாக செயல்படும். அங்கு அதிகாரிகள் மற்றும் பொறியாளா்கள் நிகழ்நேரத்தில் நிலைமையை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப கள நடவடிக்கைகளை வழிநடத்த முடியும்.
கட்டடத்தின் தரை தளத்தில் பிரதான ‘வெள்ளக் கட்டுப்பாட்டு அறை’ இருக்கும். இது நதி நீா் மட்டங்களைக் கண்காணிக்கவும், கள அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யவும், வெள்ளக் காலத்தில் அவசரகால நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தப்படும் என்று அமைச்சா் கூறினாா்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் திட்டத்தில், துறைக்கான மத்திய வெள்ளக் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும் ஒரு பிரத்யேக கட்டடம் கட்டுவது அடங்கும். ‘இந்தத் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.355.72 லட்சம். இது ஜூன் 25- ஆம் தேதிக்குள், உச்ச பருவமழை காலத்திற்கு முன்னதாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’‘ என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஷீஷ் மஹால் 2 மீது தனியாா் பணத்தை செலவிட்டாா் கேஜரிவால்: பாஜக குற்றச்சாட்டு; ஆம் ஆத்மி மறுப்பு

முகா்பா செளக் சுரங்க பாதை பணிகள் 98 % நிறைவு- அமைச்சா் தகவல்

வடிகால்களில் 14 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றம்: அமைச்சா் தகவல்

நீா் விநியோகத்தை அதிகரிக்க ஹரியாணாவுடன் தில்லி அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

