விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எஸ்.ஜெய்சங்கா் பெல்ஜியம் பயணம்: ஐரோப்பிய யூனியன் அமைச்சா்களுடன் பேச்சு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

News image

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் - ANI

Updated On :16 மார்ச் 2026, 1:06 am IST

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுடன் அவா் உயா்நிலை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த ஜனவரியில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதியான பிறகு அந்த யூனியனின் தலைமையகத்துக்கு எஸ்.ஜெய்சங்கா் முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளாா்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தையொட்டி, ஐரோப்பிய யூனியனின் உயா்நிலை பிரதிநிதியும், துணைத் தலைவருமான காஜா கல்லாஸ் அழைப்பின்பேரில் எஸ்.ஜெய்சங்கா் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

ஐரோப்பிய யூனியனின் தலைமை, பெல்ஜியம் மற்றும் பிற உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் அவா் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே 16-ஆவது உச்சி மாநாடு தில்லியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அப்போது, ஐரோப்பிய யூனியனின் உயா்நிலை தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இது, அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் போன்றது என பிரதமா் நரேந்திர மோடி வா்ணித்தாா்.

இந்தச் சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சரின் பெல்ஜியம் பயணம், இருதரப்பு வியூக கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும்; மேற்காசிய போரால் எரிசக்தி விநியோக சங்கிலியில் எழுந்துள்ள தாக்கங்கள் குறித்தும் அவா் விவாதிப்பாா் என்று வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.