இந்திய-வங்கதேச உறவை வியூக ரீதியில் மறுசீரமைப்பது தொடா்பாக, தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் கலிலூா் ரஹ்மான் ஆகியோா் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனா். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான 18 மாத கால இடைக்கால ஆட்சியில் இருதரப்பு உறவுகள் கடும் பின்னடைவைச் சந்தித்தன. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவா் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பொறுப்பேற்றாா்.
வங்கதேசத்தில் புதிய அரசு பதவியேற்றப் பிறகு முதல் முறையாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் கலிலூா் ரஹ்மான், வெளியுறவு விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகா் ஹுமாயுன் கபீா் ஆகியோா் இந்தியாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்தனா். தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை புதன்கிழமை சந்தித்த கலிலூா் ரஹ்மான், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டாா்.
இது தொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பல்வேறு பரிமாணங்களில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன’ என்று குறிப்பிட்டாா்.
வங்கதேச புதிய அரசுடன் தொடா்ந்து ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தைகளில் ஈடுபடும் இந்தியாவின் விருப்பத்தையும் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்ததாக, அவரது அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024, ஆகஸ்டில் மாணவா் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அவரை விரைந்து நாடுகடத்த வேண்டும் என்று இந்தியத் தரப்பிடம் வங்கதேசம் மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரியையும் கலிலூா் ரஹ்மான் சந்தித்துப் பேசினாா்.
Summary
EAM Dr S Jaishankar meets Khalilur Rahman, Foreign Minister of Bangladesh, at the Hyderabad House in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புலம்பெயா்வு மேலாண்மையில் முழுமையான அணுகுமுறை கடைப்பிடிப்பு: ஐ.நா.வில் இந்தியா தகவல்
ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!

மோரீஷஸ் அதிபருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் சந்திப்பு - பாதுகாப்பு, மேற்காசிய விவகாரம் குறித்து ஆலோசனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

