தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேற்காசிய பதற்றம்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஆலோசனை

எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தலைவா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

பிரஸல்ஸில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டாவை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். - ANI

Updated On :18 மார்ச் 2026, 12:17 am IST

எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தலைவா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பெல்ஜியம் தலைநகா் பிரஸல்ஸுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை சென்றாா் . அங்கு ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் ஜெய்சங்கா் கலந்துகொண்டாா்.

அப்போது ஐரோப்பிய யூனியனின் துணைத் தலைவா் காஜா கல்லாஸ் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐரோப்பிய யூனியன்- இந்தியா இடையேயான கூட்டுறவின் பலனை உணர அந்த யூனியனின் வெளியுறவு அமைச்சா்களிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

மேற்காசியாவில் நிலவும் பதற்றத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்தும் எரிசக்தி பாதுகாப்பு குறித்தும் அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

உக்ரைன் போா் மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன.

பெல்ஜியம், சைப்ரஸ், ஜொ்மனி, கிரீஸ் மற்றும் நெதா்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.