நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று (ஜூன் 25) பதவியேற்றுக்கொண்டனர்.
மாநிலங்களவையில் காலியாக இருந்த இடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஜூன் 18 ஆம் தேதிக்குள் ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், குஜராத், ஒடிசா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் இருந்து காலியான 1 மாநிலங்களவை இடத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான தவெகவின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்ரவர்த்தி போட்டியின்றித் தேர்வானார்.
ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சனா சதீஷ் பாபு, விஜய் சிண்டகயாலா, பாஷ்யம் ராம கிருஷ்ணா மற்றும் ஜனசேனா கட்சியின் லிங்கமணி ரமேஷ் ஆகியோரும், பாஜகவின் டாய் டகக் (அருணாசலம்), ராஜேஷ் பார்மானந்த் சுக்லா (குஜராத்), டெபாஷிஷ் சமாந்தராய் (ஒடிசா) ஆகியோரும், ஜார்க்கண்டின் பரிமால் நாத்வானி (சுயேட்ச்சை), பைதியாநாத் ராம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) மற்றும் தமிழ்நாட்டின் பிரவீண் சக்ரவர்த்தி (காங்கிரஸ்) உள்ளிட்ட 10 பேரும் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 10 பேருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள் ஹிந்தியிலும், ஒருவர் ஆங்கிலத்திலும், ஒருவர் தமிழிலும், மூவர் தெலுங்கிலும் பதவியேற்றுக்கொண்டனர்.
Summary
Ten newly elected Rajya Sabha members from various states across the country took the oath of office today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவை உறுப்பினராக பிரவீண் சக்ரவர்த்தி தேர்வு!

மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!

போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் எம்.பி.: பிரவீண் சக்ரவர்த்தி
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
தினமணி செய்திச் சேவை

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK
தினமணி செய்திச் சேவை


