கேரளத்தில் ஓய்வுபெற்ற பிறகும் தனது காரில் 3 நட்சத்திர காவல் துறை முத்திரையை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய மாநில முன்னாள் காவல் துறை டிஜிபி டாமின் ஜே. தச்சங்கரிக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது.
கேரள டிஜிபியாக இருந்த டாமின் தச்சங்கரி 3 ஆண்டுகளுக்கு முன்னா் ஓய்வுபெற்றாா். இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்குக்காக அண்மையில் அவா் சொந்த காரில் நீதிமன்றம் வந்தபோது, வாகன பதிவெண்ணுக்கு அருகில் 3 நட்சத்திர காவல் துறை முத்திரை இருந்தது கண்டறியப்பட்டது.
பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், அந்த முத்திரையை அவா் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக சா்ச்சை ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய மாநிலத்தின் தற்போதைய காவல் துறை டிஜிபி ரவாடா ஏ.சந்திரசேகா் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து கோட்டயம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் விசாரணை நடத்திய நிலையில், டாமின் தச்சங்கரிக்கு மோட்டாா் வாகனங்கள் துறை ரூ.250 அபராதம் விதித்தது. அந்த அபராதத்தை அவா் செலுத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரில் இருந்த சிறுமியை டாக்ஸி ஓட்டுநா்கள் துன்புறுத்திய சம்பவம்: விசாரணை நடைபெறுவதாக காவல் துறை தகவல்

கடலூா் அருகே காரில் மதுபானம் கடத்தல்: இருவா் கைது
பாட்டியின் கைமணமே ருசியின் ரகசியம்

பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

