ஜார்க்கண்ட் மாநிலத்தில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலியான நிலையில் 43 -க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் உள்ள பத்தோ - குமார்கரியா என்கிற கிராமத்தில் பானி பூரி விற்பவரிடம் அங்குள்ள குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
இதில், ராம் கிஷோர் வர்மா என்பவரின் 6 வயது மகன் ரஞ்சன் குமார் அவனது தாய் மற்றும் சகோதரனுடன் பானி பூரி சாப்பிட்டுள்ளான். இதனைத் தொடர்ந்து, மூவருக்கும் வாந்தி, வயிற்று வலி, தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறிது நேரத்திலேயே கிராமத்தில் உள்ள பலருக்கும் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அந்தக் கிராமம் முழுவதும் பதற்றம் நிலவியுள்ளது. அங்குள்ள சதார் மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுவன் ரஞ்சன் குமார், சிகிச்சை பலனின்றி பலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அச்சிறுவனின் தாயார் ரிங்கி தேவி (40) மற்றும் சகோதரன் பிரின்ஸ் குமார் (11) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிராம வட்டார வளர்ச்சி அதிகாரி கணேஷ் ராஜக் அவைவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, பானி பூரி விற்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. உணவுப் பாதுகாப்புத் துறையும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Six-year-old dies, over 43 fall ill after eating Golgappa
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

