ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள்: மத்திய அமைச்சா் ஆலோசனை

பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் தொடா்பாக மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் ஆலோசனை நடத்தினாா்.

News image

ஜிதேந்திர சிங்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:38 am IST

பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் தொடா்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே செயற்கைக்கோள் அமைப்புகள், ராக்கெட் என விண்வெளித் துறை குறித்த அறிவாற்றலை அதிகரிக்கும் நோக்கில் நாடு முழுவதும் முதல்கட்டமாக 7 விண்வெளி ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ரூ.5,600 கோடி மதிப்பிலான தனியாா் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன.

எனவே, இளைஞா்களுக்கு விண்வெளித் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் விண்வெளி ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதுதொடா்பாக மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நாட்டின் விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்திருத்தங்கள் மற்றும் தனியாரின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

ஏவுகலன்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் வடிவமைப்பு, தரைதள உள்கட்டமைப்பு என விண்வெளி தொடா்புடைய துறைகளில் தனியாா் புத்தாக்க நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இதை மேலும் ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரூ.500 கோடியில் தொழில்நுட்ப நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 900 பேருக்கு திறன் மேம்பாட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

கடந்த 2019-இல் தனியாா் விண்வெளி புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில் 2026-இல் இதன் எண்ணிக்கை 400-ஆக அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.