தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதுச்சேரியில் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்க குழந்தைகள் ஆணையம் ஆலோசனை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது.

News image

நாப்கின்

Updated On :8 மே 2026, 6:48 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது.

புதுச்சேரி மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் ஆா். சிவராமன் தலைமையில் ஆணைய அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆணையத்தின் உறுப்பினா்கள் மற்றும் புதுச்சேரி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் மற்றும் துணை இயக்குநா்கள் பங்கேற்றனா்.

உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நகா்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், நிதி ஒதுக்கீடு, விநியோக முறை மற்றும் கண்காணிப்பு நெறிமுறை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆணையம் கலந்தாலோசித்தது.

பள்ளிக் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில் இத்திட்டத்தைக் காலதாமதமின்றி செயல்படுத்த சுகாதாரத் துறைக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.