கேரளத்தில் வெடிவிபத்து தொடர்பாக, பட்டாசுகளின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுத்த முன்னாள் நீதிபதி ராமச்சந்திரன் நாயர் பரிந்துரைத்துள்ளார்.
கேரளத்தில் ஏப்ரல் 26-ல் நடைபெறவுள்ள பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவுக்காக பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் கோடை வெய்யிலில் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில், வெடிவிபத்து தொடர்பாக செய்தியாளர்களுடன் சி.என். ராமச்சந்திரன் நாயர் பேசுகையில், "திருச்சூர் பட்டாசு வெடிப்பில் பலர் இறந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறோம்.

திருச்சூர் வெடி விபத்து - PTI
எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமலிருப்பதை உறுதிசெய்வதே ஆணையத்தை அமைப்பதன் அரசின் நோக்கம்.
கோயில் திருவிழாக்களில் பட்டாசுகளும் முக்கிய பங்களிக்கின்றன. அவை உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
சீனாவில் அதிக சத்தம் அல்லது வெடிப்புகளைக் கொண்ட பட்டாசுகளைவிட காட்சிக்கான பட்டாசுகளிலேயே (வாண வேடிக்கை பட்டாசுகளைப்போல) கவனம் செலுத்துகின்றனர்.
அவர்களைப்போல, நாமும் பட்டாசுகளின் வடிவமைப்பை மாற்றியமைக்க முடியும். நாங்கள் இதை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவோம்.
இந்த ஆணையம், பட்டாசுகள் மீது தடையைப் பரிந்துரைக்கும் நோக்கம் கொண்டதல்ல. அவற்றைத் தடை செய்வது அல்லது முற்றிலுமாக நிறுத்துவது என்பது பொருத்தமானதாக இருக்காது" என்று தெரிவித்தார்.
Summary
Thrissur blast: Commission may recommend changes in fireworks pattern; not ban, says Former Keralam HC judge Justice C N Ramachandran Nair
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோலாகலமாக நடைபெறும் பூரம் திருவிழா! | Pooram festival
சொத்து தகராறில் உறவினா் அடித்துக் கொலை! முன்னாள் ராணுவ வீரா் கைது!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு
ரஜினிக்கு அம்மாவாக நடித்தவர் தேர்தலில் போட்டி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

