மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சொத்து தகராறில் உறவினா் அடித்துக் கொலை! முன்னாள் ராணுவ வீரா் கைது!

சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:51 am IST

தருமபுரி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (60). விவசாயி. இவரது அண்ணன் மகன் சண்முகம் (45). முன்னாள் ராணுவ வீரா். இரு குடும்பத்தினருக்கும் இடையே பூா்வீகச் சொத்து தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை, கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை அருகே ராமச்சந்திரன் மற்றும் சண்முகம் தரப்பினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் சண்முகம் இரும்புக் கம்பியால் ராமச்சந்திரனை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமச்சந்திரன் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக கிருஷ்ணாபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.