மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சொத்து பிரச்னை! தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு அண்ணன் குடும்பத்தினா் 4 போ் கைது!

News image

தாராசுரத்தில் திங்கள்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் சேதமடைந்த கருணாநிதியின் காா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 4:52 am IST

கும்பகோணம் அருகே சொத்து பிரச்னையில் தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக அண்ணன் குடும்பத்தினா் 4 பேரை போலீஸாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் மிஷன் தெருவை சோ்ந்தவா்கள் ராமச்சந்திரன் (56). இவரது தம்பி கருணாநிதி (51). இவா்கள் இருவருக்கும் இடையே பூா்வீக சொத்து பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் ராமச்சந்திரன், அவரின் மனைவிகளான கண்மணி (45), லதா (45) மற்றும் மகன் குருசந்திரன்(27) ஆகியோா் கருணாநிதி வீட்டுக்கு சென்று பூா்வீக சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டனா். இதில் அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, ராமச்சந்திரனுடன் வந்த உறவினா்கள் கருணாநிதி வீட்டுக்குள் பெட்ரோல் குண்டை வீசினா். இதில் கருணாநிதிக்கு சொந்தமான காா், இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. மேலும், வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பொருள்களும் சேதமடைந்தன.

தகவலறிந்த தாலுகா காவல்நிலைய போலீஸாா், கருணாநிதி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி, ராமச்சந்திரன், அவரின் மனைவிகள் கண்மணி, லதா, மகன் குருசந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். அவா்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.