மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற கருவைக் கொன்றது மோடிதான்: கார்கே

மகளீர் இடஒதுக்கீடு மசோதா பற்றி கார்கேவின் கருத்து...

News image

மல்லிகார்ஜுன கார்கே - file photo

Updated On :20 ஏப்ரல் 2026, 4:09 pm IST

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற கருவைக் கொன்றது பிரதமர் நரேந்திர மோடிதான் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் நிலையில், கூச் பெஹரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமரை கார்கே மறைமுகமாகச் சாடியுள்ளார்.

2029-ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா மக்களவையில் முடங்கியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் "கருக்கொலை" செய்ததாகப் பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த கார்கே, மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவைக் கொன்றது நீங்கள்தான்(மோடி). நாங்கள் தொகுதி மறுவரையறை மசோதாவைத்தான் எதிர்த்துப் போராடினோம், மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை அல்ல.

பிரதமர் மோடி மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக விரும்புகிறாரா? எனக் கேள்வி எழுப்பினார். மகளிருக்கான உரிமைகளையும் நலனையும் உறுதி செய்வதில் காங்கிரஸ் எப்போதும் மிகுந்த அக்கறை செயல்படுவதாக அவர் கூறினார்.

சரோஜினி நாயுடு, இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தி போன்ற பெண் தலைவர்கள் தனது கட்சியின் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

Summary

Congress president Mallikarjun Kharge on Monday claimed it was Prime Minister Narendra Modi who "killed" the Constitution amendment bill to implement women's quota in legislatures from 2029 and pointed out that the opposition has fought the delimitation bill only.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.