மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!

அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ அமர்வு உத்தரவு...

News image

ராகுல் காந்தி - PTI

Updated On :18 ஏப்ரல் 2026, 7:28 pm IST

லக்னௌ : ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை விதித்து அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ அமர்வு உத்தரவிட்டது.

கர்நாடகத்தைச் சேர்ந்த் பாஜக நிர்வாகி எஸ். விக்னேஷ் ஷிஷிர் என்பவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையையும் பெற்றுள்ளதாக ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு சுமத்தி இவ்விவகாரத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ அமர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

பாஜக தரப்பு மனுதாரரின் இந்த மனு ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தால் கடந்த ஜனவரியில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தில் தன் தரப்பு வாதத்தை ஏற்க தக்க ஆதாரங்களுடன் சமர்ப்பித்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ அமர்வில் நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில் ராகுல் காந்தி தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டியிருப்பதால் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இம்மாதம் 20-ஆம் தேதி, வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்திருப்பதுடன், அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிய ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 17) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.

Summary

Allahabad HC stays its decision of FIR on Rahul Gandhi in dual citizenship case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.