தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் இதுவரை ரூ.865 கோடி பணமாகவும் பொருள்களாகவும் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15 ஆம் தேதி வெளியான நிலையில், அன்று முதல் அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதன்படி, தனிநபர் ஒருவர் எந்தவித ஆவணங்களும் இன்றி ரூ. 50,000 வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு மேலாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற பொருள்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதை உறுதி செய்வதற்காக, மேற்கு வங்கத்தில் 2,728 குழுக்கள் மற்றும் தமிழ்நாட்டில் 2,283 குழுக்கள் என இவ்விரு மாநிலங்களில் மட்டும் 5,011-க்கும் மேற்பட்ட பறக்கும் படைக் குழுக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இத்துடன், பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்காக, 5,363-க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுக்களும் பணியில் உள்ளன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.17) வரை பணமாகவும், பொருள்களாகவும் மேற்கு வங்கத்தில் ரூ. 427 கோடி, தமிழகத்தில் ரூ. 438 கோடி என மொத்தம் ரூ. 865 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக, இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Summary
The Election Commission of India has announced that cash and valuables worth Rs 865 crore have so far been seized by election flying squads in Tamil Nadu and West Bengal alone.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 432 மேற்பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு பயன்பாடு! என்ஐஏவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம்

பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1,000 கோடி பறிமுதல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

