மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள வேளையில், வெடிகுண்டுகள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே. 4 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை சீர்குலைக்கவும் அரசியல் கட்சிகளின் தொண்டர்களைக் குறிவைக்கவும் சமூக விரோதிகள் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இதை உறுதி செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மேற்கு வங்கம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாங்கர் பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் எனக் கூறப்படும் ஒருவரின் வீட்டிலிருந்து காவல்துறையினர் நாட்டு வெடிகுண்டுகளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) அன்று மீட்டனர்.
தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்தும், இதுமாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்ததாக வந்த தகவல்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Summary
The Election Commission, on Tuesday (April 28), requested the National Investigation Agency (NIA) to ensure that bombs are not used on election day in West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44

மேற்கு வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடக்கம்!
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

