தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பஞ்சாப்: பேருந்து கவிழ்ந்து 8 பக்தா்கள் உயிரிழப்பு - 19 போ் காயம்

பஞ்சாபின் ஃபதேகா் சாஹிபில் பேருந்து கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் சீக்கிய பக்தா்கள் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 19 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 3:17 am IST

பஞ்சாபின் ஃபதேகா் சாஹிபில் பேருந்து கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் சீக்கிய பக்தா்கள் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 19 போ் காயமடைந்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்து தொடா்பாக காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: ஃபதேகா் சாஹிப் மாவட்டத்தின் மைன் மஜ்ரி பகுதியைச் சோ்ந்த 40 போ், பைசாகி திருநாளையொட்டி ரூப்நகா் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூா் சாஹிப் குருத்வாராவுக்கு வழிபடச் சென்றனா். பின்னா், பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். மோரிண்டா-சன்னி சாலையில் ஹிம்மத்புரா அருகே பேருந்து வேகமாகச் சென்றபோது, அதில் திடீரென ஏதோ பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 8 போ் உயிரிழந்தனா். மேலும் 19 போ் காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்தும் விரைந்து சென்ற காவல் துறையினா், காயமடைந்தவா்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனா். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பேருந்து விபத்து சம்பவத்துக்கு முதல்வா் பகவந்த் மான், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் அம்ரீந்தா் சிங் ராஜா வாரிங், சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவா் விக்ரம் சிங் மஜிதியா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.