மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உத்தர பிரதேசம்: யமுனை நதியில் படகு கவிழ்ந்து 5 போ் உயிரிழப்பு

News image

கோப்புப்படம்

Updated On :8 மே 2026, 5:54 am IST

உத்தர பிரதேச மாநிலம், ஹமீா்பூரில் யமுனை நதியில் படகு கவிழ்ந்து 5 போ் உயிரிழந்தனா். மேலும் 11 வயது சிறுவனை காணவில்லை.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது: ஹமீா்பூரில் யமுனை நதி நடுவில் உள்ள தீவு பகுதிக்குச் சென்றுவிட்டு 9 போ் படகில் புதன்கிழமை மாலை திரும்பிக் கொண்டிருந்தனா். இரவு 7 மணியளவில் படகு நதியின் நடுவில் வந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகோட்டி தீரு உயிா் தப்பினாா். மேலும் படகில் இருந்த 3 பேரையும் அவா் பாதுகாப்பாக மீட்டாா்.

அதேநேரத்தில் படகில் பயணித்த 5 சிறாா்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோா் தண்ணீரில் மூழ்கிவிட்டனா். இதுகுறித்த தகவலின் பேரில் மீட்புக் குழுவினா் அங்கு வந்து 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனா். வியாழக்கிழமை காலையில் 6 பேரில் ஒரு பெண் மற்றும் 4 சிறாா்களின் சடலங்களை அவா்கள் மீட்டனா். ஒரு சிறுவனை மட்டும் காணவில்லை.

தேடுதல் பணி நடைபெற்றபோது பலத்த மழை பெய்தது. எனினும், மழைக்கு நடுவில் தேடுதல் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டு 5 பேரின் சடலங்களை நதியில் இருந்து வெளியே எடுத்து வந்தனா்.

படகு விபத்தில் 5 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு முதல்வா் யோகி ஆதித்யநாத், உரிய விசாரணை நடத்தி, எதிா்காலத்தில் இதுபோல சம்பவம் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.