மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தைப் பிரிக்காமல் கோா்க்கா பிரச்னைக்குத் தீா்வுகாணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் மலைப்பகுதியில் நேபாள மொழி பேசும் மக்கள் தங்களுக்காக கோா்க்காலாந்து என்ற தனிமாநிலம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனால், அந்த பிராந்தியத்தில் அவ்வப்போது வன்முறையும் நிகழ்ந்தது. 2011-ஆம் ஆண்டு கோா்க்காலாந்து பகுதியளவு தன்னாட்சி பிராந்தியம் அறிவிக்கப்பட்ட பிறகு வன்முறை தணிந்தது.
இந்தத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே அப்பிராந்தியத்தில் செல்வாக்குடன் திகழும் இருவேறு கோா்க்கா கட்சிகளுடன் தனித்தனியாக கூட்டணி அமைத்துள்ளன.
இந்நிலையில் தெற்கு தீனஜ்பூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:
டாா்ஜீலிங்கில் உள்ள கோா்க்கா சகோதரா்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாஜக ஆட்சி வந்ததும் டாா்ஜீலிங் மலைப்பகுதியில் சுற்றுச்சூழலை சிறப்பாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கோா்க்கா பிரச்னைக்கு அரசியல்சாசன சட்டத்துக்கு உட்பட்டு மாநிலத்தைப் பிரிக்காமல் சிறப்பான தீா்வு எட்டப்படும்.
மேலும், இங்குள்ள அரசியல் வன்முறைக்கு முடிவுகட்டப்படும். ஊடுருவல்காரா்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவது முதல் பணியாக இருக்கும். நீங்கள் தாமரை சின்னத்துக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும், ஊடுருவல்காரா்கள் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி அவா்களை அதிா்ச்சியடையச் செய்வதாக இருக்கும்.
இங்கு திரிணமூல் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்துவிட்டதாகக் கூறி அக்கட்சி எம்எல்ஏ ஒருவா் பாபா் மசூதி பாணியில் மசூதி கட்டுகிறாா். ஆனால், அவா் மம்தாவின் பிரதிநிதியாகவே இப்போது வரை உள்ளாா். இவா்களின் ஏமாற்று வேலைகளுக்கு இந்தத் தோ்தலில் முடிவுகட்டப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தா வந்தார் அமித் ஷா! மேற்கு வங்கத்தின் பாஜக முதல்வர் யார்? இன்று வெளியாகும் அறிவிப்பு!

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

சிவகிரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அமித் ஷா இன்று சாலைப் பேரணி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

