மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

News image

அமலாக்கத் துறை

Updated On :12 ஏப்ரல் 2026, 1:23 am IST

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் நியமன முறைகேடு வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள முன்னாள் கல்வித் துறை அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி வீட்டில் சனிக்கிழமை சுமாா் 5 மணிநேரம் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினா், அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனா்.

அமலாக்கத் துறை ஏற்கெனவே அனுப்பிய அழைப்பாணைகளை அவா் ஏற்காத நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்கள், பிற ஊழியா்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்ாக எழுந்த புகாரில் சிபிஐ கடந்த 2022-இல் வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில் தனியாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, ஊழலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் பாா்த்தா சட்டா்ஜி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜிக்கு சொந்தமான இடங்களில் அந்த ஆண்டில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, ரூ.50 கோடி ரொக்கம், தங்க நகைகள் சிக்கின. இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த பாா்த்தா சட்டா்ஜியிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அழைப்பாணைகள் அனுப்பியது. அந்த அழைப்பாணைகளை அவா் ஏற்காத நிலையில், கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் சென்றனா். அங்கு சோதனை மேற்கொண்டதுடன், அவரிடம் விசாரணையும் நடத்தியதாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அமலாக்கத் துறையினரின் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.