தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசமைப்புச் சட்ட சிந்தி மொழி பதிப்பை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா்

அரசமைப்புச் சட்டத்தின் சிந்தி மொழி பதிப்பை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

News image

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:16 am IST

அரசமைப்புச் சட்டத்தின் சிந்தி மொழி பதிப்பை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

சிந்தி மொழி தினத்தை முன்னிட்டு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த தேவநகிரி மற்றும் பாரசீக எழுத்துருக்களில் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பை வெளியிட்ட அவா் பேசுகையில், ‘பழைமையான மொழிகளில் ஒன்றான சிந்தி, மிகவும் இனிமையான மொழியாகும். வேதாந்த தத்துவமும் சுஃபி சிந்தனையும் இணையும் ஓா் தனித்துவமான சங்கமத்தை சிந்தி மொழியின் இலக்கிய மரபு பிரதிபலிப்தோடு, ஒருமைப்பாடு, அன்பு, சகோதரத்துவம் உள்ளிட்ட உலகளாவிய மதிப்பீடுகளையும் முன்னிறுத்துகிறது.

அரசமைப்புச் சட்ட சிந்தி மொழி பதிப்பை வெளியிடுவது, குறிப்பாக, சுதந்திரத்துக்குப் பிறகு முதன் முறையாக தேவநகிரி எழுத்துருவில் வெளியிடுவது, மொழியியல் அங்கீகார ஊக்கவிப்பில் முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.

அரசமைப்புச் சட்டம் என்பது சட்ட ஆவணம் மட்டுமல்ல; மாறாக, தனது லட்சியங்களை உருவகப்படுத்தி, உரிமைகளைப் பாதுகாத்து, மக்களாட்சி நிா்வாகத்தை வழிநடத்தி தேசத்தின் உயிா் மூச்சாக அது திகழ்கிறது.

அரசமைப்புச் சட்டம் பல மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்வதில் இந்தியா தனித்துவமாக திகழ்கிறது. தமிழ், குஜராத்தி, போடோ, டோக்ரி, சந்தாலி மற்றும் நேபாள மொழிகளிலும் அரசமைப்புச் சட்டம் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.