அஸ்ஸாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அம்மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சி செய்த பாவப் பட்டியலை வெளியிட்டார்.
இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப். 9-இல் அம்மாநிலத்தில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (ஏப். 5) தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேசியதாவது :
“1947-இல், இந்தியப் பிரிவினையின்போது, பாகிஸ்தானிடம் அஸ்ஸாமை ஒப்படைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து செயல்பட்டது. ஆனால், அஸ்ஸாமின் முதல் முதல்வரான கோபிநாத் பார்டோலாய் அஸ்ஸாமானது இந்தியாவின் ஒருபகுதியாக இருக்க கடுமையாகப் போராடி அதனை உறுதிசெய்தார்.
1962-இல், இந்திய-சீன போரின்போது, அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு அஸ்ஸாமை விதி வசம் ஒப்படைத்தவர்.
ஊடுவல்காரர்கள் அஸ்ஸாமில் தங்கி வசித்திடவும் அவர்களுக்கான பாதுகாப்பையும் அனுமதித்தனர்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறினர்.
ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்ததுடன், நாட்டில் வழித்தோன்றல் ஆட்சியை ஊக்குவித்தனர்” என்று குறிப்பிட்டார்.
Summary
Union Agriculture Minister Shivraj Singh Chouhan on April 5, launched a sharp attack on the Congress, accusing the party of committing “five major sins” against the people of Assam since independence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!

எரிவாயு தட்டுப்பாடு? கத்தார் செல்கிறார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!

மேற்கு வங்கத்தை பாகிஸ்தான் குறிவைத்தால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
