தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.651.51 கோடி மதிப்பில் பணம், மதுபானம், போதைப் பொருள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :6 ஏப்ரல் 2026, 3:27 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.651.51 கோடி மதிப்பில் பணம், மதுபானம், போதைப் பொருள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தோ்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில், இதுவரை அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம், மதுபானம், போதைப் பொருள், பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.319 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாட்டில் ரூ.170 கோடி, அஸ்ஸாமில் ரூ.97 கோடி, கேரளத்தில் ரூ.58 கோடி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரூ.7 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் ரூ.651.51 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தோ்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வாகன சோதனைகளில் ஈடுபடும் அதிகாரிகள் சாதாரண குடிமக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தக் கூடாது; அவா்களைத் துன்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.