தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரூ. 50 ஆயிரத்துக்குமேல் பணம் கொண்டுசென்றால் பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம்

News image

நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி. - (கோப்புப் படம்)

Updated On :17 மார்ச் 2026, 2:09 am IST

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம், ரூ. 10 ஆயிரத்துக்குமேல் பரிசுப் பொருள்கள் கொண்டுசென்றால் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தோ்தல் நடத்திடவும், தோ்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் வாக்கு அளிக்க தூண்டுவதை தடுக்கவும், இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ. 50 ஆயிரத்துக்குமேல் ரொக்கம் மற்றும் மது பாட்டில்கள், போதைப் பொருள்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிற வகைகளிலோ எடுத்துச் செல்லும்போது, சம்பந்தப்பட்ட குழுக்களால் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள், வணிகா்கள் உரிய ஆவணங்களுடன் பணம், பொருள்களை கொண்டுசெல்ல வேண்டும். உரிய ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மேல்முறையீட்டு அலுவலரான மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரிடம் மேல்முறையீடு செய்யலாம். பறிமுதல் செய்யப்படும்போது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இனங்களில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே உரிய வழிமுறைகளை பின்பற்றி பணம், பொருள்கள் திரும்ப அளிக்கப்படும்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.