கேரள முதல்வர் பினராயி விஜயனை பிரதமர் நரேந்திர மோடி கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் ஆலப்புழாவில் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இடதுசாரி என்று ஒன்றுமில்லை. தேர்தலுக்குப்பின், இடதுசாரியில் எதுவும் மிஞ்சியிருக்காது.
இடதுசாரி ஜனநாயக முன்னணியை மறைமுகமாக ஒரு கை இயக்கி வருகிறது. அந்தக் கை மதவாதம் கொண்ட ஒன்று. அது இந்திய அரசியலமைப்பை ஏற்காததுடன், மக்களைப் பிளவுபடுத்தவும் முயற்சிக்கிறது.
இப்போது பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இடது முன்னணி இடையே ஓர் உறவு ஏற்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.
சிபிஐ(எம்) மற்றும் இடது முன்னணியில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் இதனை அறிவார்கள். இடது முன்னணியில் இரு வகையான தலைவர்கள் உள்ளனர்.
ஆட்சிக்காக எதையும் செய்யத் துணிபவர்கள். ஆட்சிக்காக பாஜக, ஆர்எஸ்எஸ் என யாரின் உதவி குறித்தும் அவர்கள் கவலைப்படுவதில்லை.
மற்றொரு புறம், சந்தர்ப்பவாதிகள் அல்லாத தலைவர்கள். இவர்கள் நம்பிக்கையுடன் பல ஆண்டுகளாக கொள்கைக்காக மட்டுமே உழைக்கின்றவர்கள். ஆனால், அவர்கள் இப்போது வீழ்த்தப்பட்டதாகவும் காயப்படுத்தப்பட்டதாகவும் வருத்தமடைகின்றனர்.
பிரதமர் மோடியையும் அதானியையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்டுப்படுத்துகிறார். முதல்வர் பினராயி விஜயனை பிரதமர் மோடி கட்டுப்படுத்துகிறார்.
வரும் மாதங்களில் பெட்ரோல் மற்றும் எரிவாயுவின் விலை உயரும்போது, இந்தக் கூட்டணியின் பின்விளைவுகளை மக்கள் அறிவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்டது குறித்து, கேரளத்துக்கு வருகைதந்த பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பேசவில்லை" என்று தெரிவித்தார்.
Summary
Keralam Polls 2026: Modi controls Chief Minister Pinarayi Vijayan, says Rahul Gandhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்

கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி

மோடிக்கு கேரள முதல்வர் விஜயன் பயப்படுகிறார்! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி! - அசாம் பிரசாரத்தில் ராகுல் கடும் தாக்கு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

