நாட்டில் அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் தளவாடங்கள் அமைந்துள்ள நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருள் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு ஆசிய போர் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்க அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஏப். 1) கூடியது.
இக்கூட்டத்திற்கு பிறகு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை செயலாளர் சுஜாதா சர்மா பேசியதாவது:
''நாட்டின் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் தொடர் செயல்பாட்டில் உள்ளன. சில்லறை எண்ணெய் விற்பனையில் எந்தவித வறட்சியும் ஏற்படவில்லை.
கடந்த மாதம் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலராக இருந்தது. இன்று 100 டாலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தாலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது.
2022 ஏப்ரல் 6 முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பை விட ரூ. 2 குறைந்துள்ளது. இதே நிலைதான் நீடிக்கும்.
சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை மாற்றத்தில் நுகர்வோர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கலால் வரியை அரசு நீக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விலைகளை ஏற்ற இறக்கமின்றி சீராக வைத்திருப்பதால், நமது எண்ணெய் விற்பனை சந்தை, குறைந்த வருவாயையே ஈட்டி வருகிறது. டீசல் கிடைப்பதை உறுதி செய்ய ஏற்றுமதி வரியை அரசு அதிகரித்துள்ளது.
நமக்கு போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது. அதனால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அச்சம் காரணமாக எரிபொருள்களை முன்கூட்டியே வாங்கி வைக்க வேண்டிய அவசியமும் இல்லை'' எனக் குறிப்பிட்டார்.
Summary
India has two months of crude reserves, no fuel shortage: Centre
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 30,000 கோடி நஷ்டத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

கடும் நெருக்கடி நிலையிலும் இந்தியாவில் சீரான எரிபொருள் விநியோகம்: பெட்ரோலியத் துறை அமைச்சா் புரி!

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?

பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் உயர்கிறதா?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


