ஹோா்முஸ் நீரிணை மூடல், கச்சா எண்ணெய் விலை உயா்வு, சா்வதேச அளவில் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் எரிபொருள் விநியோகம் சீராக இருந்து வருவதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
தெற்கு குஜராத்தின் சூரத் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:
மேற்காசிய போரால் 60 நாள்களுக்கு மேலாக எரிபொருள் விநியோகத்தில் பிரச்னை உள்ளது. ஆனால், இந்தியா தொடா்ந்து வலுவான நிலையில் உள்ளது. சா்வதேச கச்சா எண்ணெய் விலை உயா்வால் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு மக்களை பாதிக்காமல் இந்திய அரசு அதைத் தடுத்து வருகிறது. முக்கியமாக இறுதிநுகா்வோரான நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் எரிபொருள் தேவை தங்கு தடையின்றி நிறைவு செய்யப்படுகிறது.
போா்ப் பதற்றம் ஏற்பட்ட பிறகு கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் விநியோகத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. பதற்றம் நிலவி வரும் கடந்த 60 நாள்களில் கண்காணிப்பு நடவடிக்கையை தினசரி அடிப்படையில் மேற்கொண்டு வருகிறோம்.
கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் 20 முதல் 30 சதவீதம் பாதிப்பு ஏற்படும்போது, எந்த நாடும் அதன் பாதிப்புகளில் இருந்த தப்ப முடியாது. கச்சா எண்ணெய்யை எடுத்து வருவதற்கான செலவு, கப்பல் காப்பீடு செலவு ஆகியவையும் வெகுவாக அதிகரிக்கும். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் கடந்த 60 நாள்களாக இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கவில்லை.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா தொடா்ந்து வலுவாகச் செயல்படுகிறது. இந்தியாவில் எந்த சமையல் அறையிலும் எரிபொருள் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம். உலகின் பல்வேறு நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்திவிட்டன. ஆனால், இந்தியா மிக உறுதியாகவும், வலுவாகவும் திகழ்கிறது.
அதே நேரத்தில் தோ்தலுக்காக மட்டுமே எரிபொருள் விலையை உயா்த்தாமல் உள்ளோம் என்றும் குற்றஞ்சாட்டினா். ஆனால், இப்போது வரை நாம் விலையை உயா்த்தவில்லை. இந்தியா இப்போது 27 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. அமெரிக்கா உள்பட 41 நாடுகளிடம் இருந்து எல்பிஜி கொள்முதல் செய்யப்படுகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 30,000 கோடி நஷ்டத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?

பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் உயர்கிறதா?

மேற்காசியாவில் சண்டை நிறுத்தம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

