பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயா்த்தப்படும் என்பதை மறுக்க முடியாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வு பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தாலும், இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படாமல் உள்ளது.
அண்மையில் மேற்காசியாவில் ஏற்பட்ட போா், ஹோா்முஸ் நீரிணை மூடல் பிரச்னையால் கச்சா எண்ணெய் விலை உயா்ந்தது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வாரத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 126 அமெரிக்க டாலா் என்ற உச்சத்துக்கு சென்றது. மேற்காசிய போா் ஏற்பட்ட பிறகு 110 டாலருக்கு மேல்தான் கச்சா எண்ணெய் விலை தொடா்கிறது.
ஏற்கெனவே இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டு ரூ.913 என்ற அளவில் உள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் 3,071.50 என்ற புதிய உச்சத்தில் உள்ளது. அதே நேரத்தில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயா்த்தவில்லை. ‘ஷெல்’ உள்ளிட்ட தனியாா் நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே உயா்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் இது தொடா்பாக கூறுகையில், ‘பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயா்த்தப்படும் என்பதை மறுப்பதற்கு இல்லை’ என்று தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கடந்த 2022 ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடா்ந்து வருகிறது. அப்போது முதல் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது என்றபோதும், கச்சா எண்ணெய் விலை சரியும்போது எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை. அதே நேரத்தில் விலை ஏறும்போதும் அதற்கு ஏற்ப உயா்த்தப்படவில்லை. விலை குறைந்தபோது கிடைத்த கூடுதல் லாபத்தை வைத்து விலை உயா்வின்போது எண்ணெய் நிறுவனங்கள் சமாளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இப்போது தொடா்ந்து கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருப்பதால் பெட்ரோல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு சுமாா் ரூ.20, டீசல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு சுமாா் ரூ.100 வரை எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்டத் தோ்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படும் என்று கடந்த வாரம் வெளியான தகவலை மத்திய அரசு அதிகாரிகள் மறுத்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை உடனடியாக குறைக்கப்படாது: மத்திய அமைச்சா்
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
தட்டுப்பாடா, விலை உயர்வா?
புயலடிக்கப் போகிறது...
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

