முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தவெக அரசும் இப்படியா? குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

தவெக அரசும் இப்படி செய்தால் எப்படி என புலம்பும் வகையில் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

News image

குரூப் - 1 பணியிடங்கள்

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் உள்ள குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வில் பங்குபெற ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் 26 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டிருப்பதன் மூலம், அரசு வேலைக்காகக் காத்திருக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய மன நெருக்கடியை ஏற்படுத்தும்.

PDF
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பார்க்க

இதற்கு முன்பு, 70 அல்லது 90 காலிப் பணியிடங்களுக்காக தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதுவே இளைஞர்களுக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வெழுதுவார்கள். இந்த முறை அதனை விடவும் குறைவாக வெறும் 26 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியிருப்பது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், துணைப் பதிவாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாக, ஆண்டு திட்ட அட்டவணைப்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமும் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.